By சேகர் ராஜதுரை

மனிதர்கள்
மலர்களைப் பறிப்பது இயல்பு
மலர்களே
மனதினைப் பறிப்பது - இந்தக்
காதலில் மட்டும்தான்
உன்னைப் போல....

By சேகர் ராஜதுரை

எனக்குத் தெரிந்து
இந்த உலகில்....
மலர்களின் இதழ்கள்தான்
மென்மையானவை..... இதமானவை.....
2010 ஜனவரி 16 வரைக்கும்..
அதற்குப் பிறகு
அவளின் இதழ்கள்தான்
அன்றுதான்
அவள் எனக்கு
முத்தமிட்ட முதல் நாள்....
By சேகர் ராஜதுரை
நீ
சுற்றுலா போனபோது
பேராதனைப் பூங்கா
பேரானந்தம் கொண்டது
சுற்றுலாத் தளமொன்று
தன்னைச்
சுற்றிப் பார்க்குதென்று....

கண்மணி உன்னை

கண்பார்த்ததில்
கண்டிப் பூங்காவை
நானும் கண்டுகொள்ளவில்லை.....
By சேகர் ராஜதுரை

ஏன் நான்
உன்னைக் காதலிக்கிறேன்
அதற்கு என்னால்
ஆயிரம் கரணம் சொல்ல முடியும்

ஏன் நீ

என்னைக் காதலிக்கவில்லை
அதற்கு நீ
ஒரேயொரு காரணமாவது சொல்...

By சேகர் ராஜதுரை

பெண்ணே!
என் காதலை ஏற்றுக்கொள்
இல்லை
எப்படியாவது என்னைக் கொல்
உன்னால் நான்...
உயிரிழக்காமல் சாகிறேன்
உணர்வில்லாமல் வாழ்கிறேன்
காதல் அனுபவமும்
உந்தன் நினைவுகளும்
இதமாய்த்தான் இருக்கிறது
அதனால் வாழப் பிடிக்கிறது
சிலநேரம்
உந்தன் நினைவுகளும்
இரக்கமில்லா இரவுகளும் தனிமைகளும்
என்னை
இன்ச் இன்சாய் கொல்கின்றன
அதனால் வாழப் பிடிக்கவில்லை
நான் வாழவா? சாகவா?

By சேகர் ராஜதுரை
அதிகமானவர்களுக்கு
கவிதை எழுதத்தெரியும்
ஆனால் சிலருக்குத்தான்
கவிதையைத் தெரியும்
அந்தச் சிலரில்
நானும் ஒருவன்....
By சேகர் ராஜதுரை
எனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
முதலிடத்தில் இருப்பது
நீ..........

உனக்கு
பிடித்தவைகளின் பட்டியலில்
இடம் கொடுக்காவிட்டாலும்
பரவாயில்லை

உனக்கு
பிடிக்காதவைகளின் பட்டியலில்
கடைசி இடமாவது
கொடு எனக்கு...

எது எப்படியோ....
உன் பட்டியலில்
இடம் கிடைத்தால் போதும்
எனக்கு....
By சேகர் ராஜதுரை

நீ என் வாழ்க்கையின்
ஒரு பகுதியக மட்டும் இருக்கலாம்
ஆனால்.........
உன் மீது நான் வைத்திருக்கும் காதல்
என் ஆயுள் வரை இருக்கும் - ஏன்
நான் இறந்த்தாலும் இருக்கும்
என்னை எரித்தாலுமது சாம்பலாகும்
அந்த சாம்பலை......
நீரில் கரைத்தாலும் சரி
காற்றில் தூற்றினாலும் சரி
காற்றும் நீரும் இருக்கும் வரை
என் காதலும் இருக்கும்.....

By சேகர் ராஜதுரை
என்னை ஈன்றெடுத்த
என் அம்மாவுக்கு
நான் வென்றெடுப்பவையெல்லாம்
சமர்ப்பணம்

நனைய விரும்புவோர்

உங்கள் கருத்துக்கள்