By சேகர் ராஜதுரை
இதுவரைக்கும் - நான்
எழுதிப் படித்த கவிதைகளுள்
எனக்குப் பிடித்த கவிதை
அவளின் பெயர்.....
அவளுக்குப் பெயர் வைத்தவன்
என்னை விட(ப்)
பெரிய கவிஞனா?
************
எனக்கு அவளைப் பிடிக்கும்
ஆனால்.....
என் பேனைக்கு
அவளின் பெயரைத்தான் பிடிக்கும்
************
கவிதை......
எழுதுவதை விட
அவளின்....
பெயரை எழுதுவதுதான்
எனக்கும் பிடிக்கும்
என் பேனைக்கும் பிடிக்கும்
************
அவளின்
பெயர் எழுதிவைத்த காகிதம்
மணக்கிறது.....
அகராதியில் அர்த்தம் தேடினேன்
அவளின் பெயருக்கு
அங்கே.......
"துளசி" என்றிருந்தது
Post a Comment